Clicksia நண்பன்: يناير 2011

السبت، 15 يناير 2011





அணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறுதி வாய்ப்பு

- ஈரான்

அடுத்த வாரம், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தே கம் கொண்டுள்ளன. ஆனால் தனது அணுசக்தி ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2009ல் இது பற்றி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடை ந்ததை அடுத்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதனால், மீண்டும் பேச்சுவார்த்தைக் கிணங்க வேண்டிய சூழல் ஈரானுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகவருக்கான ஈரானின் தூதர் அலி அஸ்கர் சுல்தானியா கூறுகையில், டெக்ரானில் உள்ள அணு உலையில் தயாரிக்கப்படும் யுரேனியம், மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இது குறித்து நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு இதுவே இறுதி வாய்ப்பாக அமையும் இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் பாராளு மன்றம் அனுமதி அளிக்காது என்றார்.


கிழக்கு பிரதேசத்துக்கு 345 மெ. தொ. உணவு நேற்று அனுப்பி வைப்பு


வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன.
110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.
இவற்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்திய அரசின் சார்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நிவாரணப் பொருள்களை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.
பருப்பு, சீனி, போர்வை, தண்ணீரை சுத்தமாக்கும் மாத்திரைகள், குடிநீர், பாய் போன்றவை அடங்கிய இந்த முதல் தொகுதி நிவாரணப் பொருள்களை விமானப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இணைந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 320 மெட்ரிக் தொன் உலருணவு நிவாரணப் பொருள்களும் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக அவ்வமைச்சின் அதிகாரி கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் உலக உணவுத் திட்டத்தின் லொறிகளில் நேற்று முதல் உலருணவுப் பொருள்கள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 50.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 318, 500 பேருக்கு விநியோகிக்கவென 63 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்களும், அம்பாறையில் பாதிக்கப்பட்ட 153, 500 பேருக்கு 191 மெட்ரிக் தொன்களும், திருகோணமலை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு 50 மெட்ரிக் தொன்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 13 ஆயிரம் பேருக்கு 16 மெட்ரிக் தொன்களுமாக அரிசி, சீனி, பருப்பு, மரக்கறி எண்ணெய் ஆகிய பொருள்கள் அடங்கிய 320 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரி கூறினார்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் முதற் கட்டமாக 1280 கிலோ கிராம் உணவுப் பொருட்கள் விமானப் படையின் ஐ. எல். 76 ரக விமானம் மூலம் அனுப்பப்பட்டதோடு ஏனைய உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்திய நிவாரணப் பொருட்களைஇந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரிடம் கையளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடொன்று வழங்கிய முதலாவது நிவாரண உதவி இதுவாகும்.
இதேவேளை விமானப்படையின் எம். ஐ. 17 ரக மற்றும் பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு மற்றும் ஏ. என். 32 ரக விமானம் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இந்த விமானங்களினூடாக நேற்று மட்டக்களப்பிற்கு 1038 கிலோ கிராமும், சேருநுவரவுக்கு 800 கிலோ கிராமும், கல்லாறுக்கு 3333 கிலோ கிராமும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் ‘லா-நினா’- கடும் குளிர்


  இலங்கையில் கடந்த சில தினங்களாக வெப்ப நிலையில் சடுதியான தளர்வு ஏற்பட்டு அசாதாரனமான முறையில் கடும் குளிர் நிலவுவதுடன், பனிமூட்டமும் காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலைக்கு சுமார் 82 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உட்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நுவரெலியா, கண்டி போன்ற மத்திய மாகாணப்பிரதேசங்களில் மாத்திரம் அன்றி கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்கப்பு. அனுராதபுரம் ,யாழ்ப்பாணம் என தீவின் சகல பாகங்களிலும் மக்கள் கடும் குளிரையும், பனி மூட்டம் காரணமாக புகார் போன்ற மப்பும் மந்தாரமுமான ஒரு நிலையினையும் முழு நாளும் அனுபவித்து வருகின்றனர்.

அத்தோடு கிழக்கு மாகாணம் சார்ந்து தாழ் அமுக்கம் நிலை கொண்டு விரிவடைந்துள்ளதனால் வழமைக்கு மாற்றமான முறையில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காற்றினால் தொடர்ச்சியான மழைவீழ்சிசயையும், அதன் காரணமாக கிழக்ககு மாகாணத்தில் சுமார் 100 வருடங்களுக்கு பிறகு 300 மி.மீற்றர்களைத் தாண்டிய (341மி.மீ.)மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்று பெரு வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

மழை வீழ்ச்சியானது வடமத்திய மற்றும் மத்திய மாகாணத்திற்கும் அதிகளவில் கிடைக்கப் பெற்றதுடன் மத்திய மலை நாட்டில் பரவலாக சுமார் 100 இற்கும் மேற்பட்ட நில சரிவுகளும் நிகழ்ந்துள்ளன. மேற்குறிப்பிட்ட கனத்த மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக சுமார் 11 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2இ 60 000 பேர் இடம் பெயர்ந்தும் உள்ளனர். இந்நிலை இலங்கையில் மாத்திரம் அன்றி அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகர வலயம், பிலிபைன்ஸ், பிரேஸிலின் ரியோடிஜெனரோ மற்றும் ஸாஓபோலோ நகர வலயங்கள்; என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது நிலவும் கடும் குளிருக்கு லா-நினா காரணமாக இருப்பதுடன், அதிகரித்த மழை வீழ்ச்சி, வெள்ளம், மண்சரிவு என்பனவற்றிற்கு வடகீழ் பருவக்காற்று, வளிமண்டல குழப்பங்கள் (அயன குழப்பங்கள்- மற்றும் காலநிலை மாற்றம் என்பன காரணங்களாக இருக்கின்றன. பொதுவாக மக்கள் வளிமண்டல குழப்பங்கள், காலநிலை மாற்றம் தொடர்பாக அறிந்து வைத்துள்ளதால் அவற்றினை மிக சுருக்கமாகவும், பொதுமக்களுக்கு பரீட்ச்சயமில்லாத எல்-நினோ பற்றியும் அதனைத் தொடர்ந்து வரும் லா-நினா பற்றியும் விரிவாக நோக்கலாம். 

பிரபஞ்சத்தில் அறியப்பட்ட உயிரின மண்டலமான எமது பூமி தோன்றிய காலம் முதல் பூமிக்கான வளிமண்டல வாயுக்கள், அதன் கட்டமைப்பு என்பன மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளன. இதே போன்று பூமியின் காலநிலையும் அது தோன்றிய காலம் முதல் படிப்படியாக நீண்ட கால அடிப்படையில் இயற்கையான முறையில் மாற்றம் கண்டு வந்துள்ளது. ஆனால் இன்றய நிலையில் இணைய தளங்கள் உட்பட பொதுசன தொடர்பு சாதனங்களில் ‘காலநிலை மாற்றம்’ பற்றிய தரவுக்கள் வெளியிடுகின்றன. 

இந்த காலநிலை மாற்றமானது வரலாற்று ரீதியிலான காலநிலை மாற்றத்திலிருந்து முழுமையாக வேறுபட்டதாகும். குறிப்பாக 1970 ஆம், 1980 ஆம் ஆண்டுகளைத் தொடந்த பலராலும் பேசப்பட்டு வரும் சடுதியான காலநிலை மாற்றத்திற்கு அடிப்படைக் காரணம் மனித செயல்பாடுகளாகும . அதாவது கைத் தொழில் புரட்சியைத் தொடர்ந்து ஆரம்பித்து இரண்டாம் யுத்தத்துடன் படிப்படியாக அதிகரித்த பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றமும் அதனால் ஆன பூகோள ரீதியியலான பச்சை வீட்டு விளைவைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பூகோள வெப்பமடைவும் அதன் காரணமான காலநிலை மாற்றமும் ஆகும். எனவே கடந்த 30 - 40 வருடங்களாக ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்திற்கு மனித செயற்பாடுகளே அடிப்படைக் காரணமாகும். 

காலநிலை மாற்றம் காரணமாக பூகோள ரீதியில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு கிடைக்க வேண்டிய சாதாரன மழை வீழ்ச்சி, வெப்பநிலை என்பதற்குப்பதிலாக காலம் மாறிய தொடர்ச்சியான கனத்த மழை, சூறாவளிகள், டோனாடோஸ், அதிகரித்த இடி-மின்னல் என்பன அசாதாரன முறையில் ஏற்பட்டு பெரு வெள்ளம், பாரிய நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்கள் எற்படக்காரணமாகின்றன. அத்தோடு அகோர வெப்பம், மணற்பயல், காட்டுத்தீ, முனைவில் உள்ள பனிப்படலங்கள் கரைதல், சமுத்திர வெப்ப அதிகரிப்பால் கடல் மட்டம் உயர்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. உண்மையில் சாதாரண மழைவீழ்ச்சியினால் மனிதனும் ஏஏனைய உயிரினங்களும், எமது சுற்றுச் சூழலும் சபீட்சம் அடைவதற்குப்பதிலாக வேறுப்ட பாதிப்புக்களுக்கு உட்படக்கூடிய நிலையில் இருப்பதுடன், சாதாரன பொதுவான வெப்பநிலை காரணமாக தாவர வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு என்பதற்குப்பதிலான அகோர வெப்பநிலை காரணமாக உயிரினங்கள் பாதிகப்பட்டு வருவதுடன், தாவரங்கள் கருகி வறுமை, பசி, பட்டினிக்கும் காரணமாகின்றது.

எல்நினோ 

பூகோளரீதியிலான சமுத்திர மேற்பரப்;பு வெப்பநிலை (மாற்றம்) அதிகரிப்பில் எல் - நினோ வின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகவும், குறைந்தளவான கால இடைவெளிக்குள் அடிக்கடி ஏற்பட்டு சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையில் செல்வாக்குச் செலுத்தி வரக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக எல்-நினோவானது சரிசமமான கால இடைவெளில் அன்றி சடுதியாக ஆனால் வேறுபட்ட அளவுகளில் குறிப்பிட்ட சமுத்திர பிரதேசத்திற்கான குறிப்பிட்ட காலத்திற்கான சார்பளவில் சற்று அசாதாரண ஓரளவு வெப்பநிலையுடன் கூடிய (காலநிலை) நிலைமையாகவே இது சமுத்திரப்பரப்புக்களில் காணப்படுகின்றது. உதாரணணமாக ஒவ்வொரு வருடமும் பிரதேசரீதியாகவும், காலரீதியாகவும், உலகில் நிலவும் வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், மாரி காலம் என்பதைப் போன்ற ஒன்றே பல வருட இடை வெளியில் ஏற்படும் இந்த எல் - நினோவும் காணப்படுகின்றது. 

பொதுவாக எல் - நினோ நிலைமையானது 2 வருடங்கள் முதல் 7 வருட இடைவெளிக்குள் உருவாகக் கூடியதாக உள்ளது. அத்தோடு அது இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை நிலை பெற்று சாதாரண காலநிலையில் பல மாற்றங்களை தோற்றுவிக்கக் கூடியதாகவும், உலகின் வேறுபட்ட பிரதேசங்களில் வேறுபட்ட காலநிலை சார்ந்த அசாதாரண நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடியதாகவுமுள்ளது.

இதனாலேயே ஒரே காலப்பகுதியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியாவில் அகோர வெப்பம், அதே போல் பேரு ஈக்குவடோரில் அதிக வெப்பம் மற்றும் சிறிய கால இடைவெளிக்குள் பங்களாதேசஷில் வெள்ளம், ஐரோப்பாவில் கடும் குளிருடன் கூடிய பனிப்புயல், தென்னாபிரிக்க நாடுகளில் அகோர வரட்சி, அவுஸ்திரேலியாவில் கடும் வரட்சியுடன் கூடிய காட்டுத் தீ, கிழக்கு பசுபிக் நாடுகளில் சூறாவளி என உலகில் ஒரே காலப்பகுதியில் ஒரே அகலக் கோட்டு நாடுகளில் வௌ;வேறு ஆனால் அசாதாரண காலநிலை நிலைமைகள் ஏற்படக் கூடியதாகவுள்ளது.

பொதுவாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் சாதாரண கடல் நீர் வெப்பநிலை, அப்பிரதேச காலநிலையின் சாதாரண போக்கிற்கு மாற்றமாக அதிக வெப்பநிலை, கடல் மேற்பரப்;பு நீர் வெப்பநிலை அதிகரிப்பு என்பன சுமார் இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை நிலை பெற்றால் நாம் அதை எல் - நினோ நிலைமை எனக் கண்டறிய முடியும்.

குறிப்பாக குளிரனா கடல் நீரோட்டமான ‘கம்போல்ட்’ குளிர் நீரோட்டம் அதிகளவு ஆழத்தோடு, பிலாங்டன் மீன் உணவையும் தன்னகத்தே கொண்டு மேல் எழுந்து தென் அமெரிக்க மேற்கு கரையேரத்தை அண்டி வடக்கு நோக்கி சென்று மத்திய கோடடை அடைந்ததும் பசுபிக்ககை ஊடறுத்து மேற்காக திரும்பிவிடுவது சாதாரண நிகழ்வாகும். 

இதனை விளக்கமாகக் கூறுவதாயின் கிழக்கு பசுபிக், தென்னமெரிக்க நாடுகளான ஈக்குவடோர், பேரு மற்றும் சிலி போன்ற நாடுகள் சார்ந்த பசுபிக் சமுத்திரப் பகுதியிலிருந்து மத்திய கோட்டுப் பக்கம் சார்ந்து மேற்கு நோக்கி வீசும் வியாபாரக் காற்றானது ஈக்குவடோர், பேரு மற்றும் சிலி சார்ந்த பசுபிக் சமுத்திர மேற்பரப்பில் சாதாரணமாக நிலவும் சாதாரண வெப்ப நீரினை பசுபிக்கின் மேற்குக் கரை நாடகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளது கரைப் பகுதிக்கு நகர்த்தி விடும். இதனால் சாதாரண காலநிலை நிலவும் காலப்பகுதிகளில் பசுபிக்கின் கிழக்குக் கரை நாடுகளான பேரு மற்றும் சிலி போன்ற நாடுகளது கரையோரங்களிலும் அதன் தாக்கம் காரணமாக உள்நாட்டிலும் குளிர்ச்சியான நிலைமை காணப்படும். இதே காலப்பகுதியில் மேற்கு பசுபிக் கரையோர அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் சமுத்திர் நீர்ப்பரப்பு வெப்பமானதாக (சாதாரண நிலைமை) காணப்படும். 

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் லா-நினா பற்றி நோக்கும் போது குறிப்பாக ஒரு நாட்டின் காலநிலையினைத் தீர்மானிப்பதில் கடலின் அண்மை செய்மை, வெப்ப நீரோட்டங்கள் என்பனவும் ஏனைய பல காரணங்களுடன் முக்கியம் பெருகின்றன. இந்த வகையில் இங்கிலாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் மக்கள் வாழக்கூடிய வகையில் வாய்ப்பான சுவாத்தியம் நிலவுவதற்கு அடிப்படைக்காரணம் அந்நாடுகளுக்கு அருகாமையில் சமுத்திரப் பரப்புக்களில் ஓடும் வெப்பமான குடா நீரோட்டமாகும். ஆனால் அதே அகலக் கோடுகளில் இருக்கும் ஸைபீரியப்பகுதியில் தொடர்ந்து குளிர் நிலவுகின்றது. அதாவது பரப்பில் பெரியநாடுகளில் கூட சமுத்திர நீரின் வெப்ப, குளிர்த்தன்மையின் செல்வாக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தீவானது உலக சமுத்திரப்பரப்புக்களுடன் ஒப்பிடும் போது கிழக்கு மேற்காக சிறியளவு தூரத்தைக் கொண்ட ஒரு நாடாகும். 

இதனால் லா-நினா காரணமாக சமுத்திர நீர் தூர இடங்களில் குளிர்ச்சியடைந்நதாலும் இதன் செல்வாக்கு இலங்கையில் இருக்கும். அத்தோடு உலக ரீதியல் தொடர்ந்தும் அதிக குளிர்ச்சியை அனுபவித்து வரும் ஸைபீரியப் பகுதியிலிருந்தான அதிகுளிர் காற்றுக்களின் செல்வாக்கிற்கு உட்படக் கூடிய வாய்ப்புக்கள் இலங்கைக்கு அதிகம் காணப்படுவதனால் தொடர்ச்சியான குளிர்ச்சுவாத்தியமும், பனி மூட்டத்துடன் கூடிய நிலையும் உள்வாங்கப்படுள்ள அசாதாரண நிலையில் இலங்கை காணப்படுகின்றது. இதனால் இலங்கையில் குறிப்பிட்ட இந்த காலத்திற்குறிய குளிர்ச்சி மற்றும் லா-நினாவின் தாக்கம் காரணமாக தீவின் குறிப்பிட்ட சில நகரங்கள் தவிர அனேக நகர்களில் வெப்பநிலை 200 ஊ யை விட குறைவாக காணப்படுவது குறிப்பிட்த்தக்கது. குறிப்பாக இலங்கையில் லா-நினாவின் செல்வாக்கு 10 – 25 நாட்கள் வரை செல்வாக்கு செலுத்தக் கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டாலும் இலங்கையில் ஜனவரி இறுதி வாரத்திற்கு முன்னர் படிப்படியாக குளிர்குறைந்து சாதாரண நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. 

எம்.ஏ. எம். இஸ்திகார், 
சிரேஷ்ட விரிவுரையாளர்
புவியியல் துறை, 
பேராதனைப் பல்கலைக்கழகம். _
இருபது-20: 2 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி
வீரகேசரி இணையம்  1/15/2011 12:18:37 PM-இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் தொடர்ந்து 8 இருபது ஓவர் போட்டிகளில் வென்று சாதனை படைத்திருந்த இங்கிலாந்து வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

நாணயசுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இருபது ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் பின்ச் 53 ஓட்டங்களை பெற்றார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடரும் 1 - 1 என்று சமநிலையில் முடிந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பெல் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றார். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜொன்சன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 
, , , , , , , 

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாளோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள்
நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புத்தி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்....
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே


Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?
 
உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.
அமெரிக்காவின் வடமாகாணக் காடுகளில் புதியவகை வெளவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அருகி வரும் உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் ஆய்வாளர்கள் காட்டுக்குள் 13 நாட்கள் தங்கியிருந்து இவ்வகை வெளவால்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவை, ரினோலொபஸ் பிளெஸி என்ற விஞ்ஞானப் பெயர் கொண்ட வெளவால் இனத்தின் மற்றுமொரு பிரிவைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வகையான வெளவால்களை ஒத்த இனம் மேற்கு அமெரிக்கக் காடுகளில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாணக் காடுகளில் 27 வகையைச் சேர்ந்த 245 வெளவால் இனங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.